| |
|
| |
Apr 11, 2009 5:51 am |
|
re: re: re: re: Another Tsunami in July |
charuhasan
| |
Pray for Kalaignar Karunanidhi also.......... தமிழக முதல்வர் மு. கருணாநிதிக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இந்தக் கடிதத்தை எழுதிய குற்றவாளியைப் பிடிப்பதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் கருணாநிதிக்கு விடுதலைப் புலிகளின் பெயரில் வந்துள்ள மிரட்டல் கடிதத்தில், "இலங்கையில் தமிழ் இனம் அழிவதற்கு காரணமாக செயல்படும் கருணாநிதியே, சோனியாவின் கைப்பாவையாக செயல்படுகிறாய். தேர்தல் பிரசாரத்திற்கு நீ ரோட்டுக்கு வரத்தானே செய்வாய். அப்போது உன்னை பார்த்துக்கொள்கிறோம். உனக்கும் உன் குடும்பத்தினருக்கும் சாகும் நேரம் வந்து விட்டது." என்று கூறப்பட்டுள்ளது. மேலும், விடுதலைப் புலிகளின் சின்னத்துடன் தமிழரசன் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தக் கடிதம் குறித்து காவல் ஆணையர் ராதாகிருஷ்ணனிடம் புகார் அளிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் மத்திய குற்றப் பிரிவு துணை ஆணையர் விஜயகுமாரியின் நேரடி மேற்பார்வையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடிதம் அனுப்பியவரை பிடிக்க உதவி ஆணையர் தலைமையில் 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.Private Reply to charuhasan (new win) |
|
| |
|