| |
| |
| The Chennai Network Network is not currently active and cannot accept new posts | Thought Provoking and Hilarious - But in Tamil | Views: 834 | Jun 23, 2010 3:51 pm | | Thought Provoking and Hilarious - But in Tamil | # | Senthil Nathan | | I just happened to read this content forwarded by a friend and the original link is from here...
http://karisalkaran.blogspot.com/2010/06/28-2010.html
I have no words to express the feeling I had on reading this article...Though it seems to be Hilarious it is thought provoking. So can be a perfect example of Vancha Pugazchi Ani
செம்மொழி மாநாட்டின் பயன்கள் - 28 சூன் 2010 கோவையில் இன்று 23-06-2010 முதல் 27-06-2010 வரை நடக்கப் போகும் செம்மொழி மாநாட்டால் ஏற்படும் பயன் என்ன?மக்களின் வரிப் பணம் தான் வீணாகிறது என்று சில பதிவர்கள் இடுகை போட்டுள்ளார்கள். 27ந் தேதி மாநாடு முடிவடைகிறது,28 ந் தேதி நடக்கப் போகும் அதிசயங்கள் குறித்து அரசு வெளியிடப் போகும் அறிக்கை இதோ......
செம்மொழி மாநாட்டால் விளைந்த நன்மைகள் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 149 அடியாக உயர்த்திக் கொள்ள கேரள அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.அதற்கான கடிதத்தை கேரள நீர்ப்பாசன துறை அமைச்சர் பிரேமசந்திரன் நேற்று முதல்வரை சந்தித்து வழங்கினார்.
வருடா வருடம் தமிழகத்திற்கு சேர வேண்டிய தண்ணீர் சரியாக கொடுக்கப்படும்,இனி எந்த சூழ்நிலையிலும்,மழை பெய்தாலும்,பெய்யாவிட்டாலும் இதை மாற்ற மாட்டோம் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தின் அனைத்து நதிகளும் இணைக்கப்பட்டு விட்டதால் இனி விவசாயிகள் முப்போகம் விளைவிக்கலாம்.அதற்கு தேவையான உரங்களை அழகிரி வீட்டின் பின்புறம் உள்ள உரக்கிடங்கிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்,மேலும் அதற்காகும் போக்குவரதது செலவை அரசே ஏற்றுக் கொள்ளும்.
கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள்,இனி இலங்கை கடல் எல்லைக்குள்ளும் மீன் பிடித்துக் கொள்ளலாம்,அதோடு மட்டுமில்லாமல் பிடித்த மீனோடு கொழும்பு சென்று,அங்கேயே சமைத்து சாப்பிட்டு வரலாம்.அதற்கு தேவையான அரிசி,எண்ணெய்,மசாலா சாமன்களை தந்து உதவ இலங்கை அரசுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நடை பெற்று வந்த மின் திட்டப் பணிகள் அனைத்தும் நேற்றுடன் முடிந்து விட்டது,ஆகவே இனி தமிழகத்தில் மின் வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை.
....to be continuedPrivate Reply to Senthil Nathan | Jun 23, 2010 3:58 pm | | re: Thought Provoking and Hilarious - But in Tamil | # | Senthil Nathan | | .....continued
தனியார் பள்ளிகள் மற்றும் தனியார் கல்லூரிகள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்று முதல்வரை சந்தித்து இனிமேல் அனைத்து தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் எல்லாருக்கும் இல்வசக் கல்வி அளிக்கப் போவதாக "துண்டைப் போட்டு தாண்டி" உறுதியளித்துள்ளனர்.இனி அமைச்சரின் பிள்ளைகளும்,ஆண்டியின் பிள்ளைகளும் அருகருகே அமர்ந்து கல்வி பயிலலாம்.
பொது விநியோக கடைகளில் வழங்கப்பட்டு வந்த 1 ரூபாய் அரிசி,இன்று முதல் தரம் உயர்த்தப் பட்டு "பாசுமதி" அரிசி வழங்கப்படும்.மேலும் பருப்பு,காய்கறிகள்,என்ணெய்,மசாலாப் பொருட்கள் முதல் தாளிக்க தேவையான கடுகு,கறிவேப்பிலை வரை அனைத்தும் 1 ரூபாய்க்கே வழங்கப்படும்.
பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை அறவே நீக்கப்பட்டு விட்டது,அதோடு ஒரு ஆசிரியருக்கு ஒரு மாற்று ஆசிரியர் (சப்ஸ்டியூட்)ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.முதன்மை ஆசிரியர் விடுப்பு எடுத்தால்,மாற்று ஆசிரியர் அவர் பணியை மேற்கொள்வார்.இதன் மூலம் பள்ளிகளில் தங்கு தடையில்லாமல் வகுப்புகள் நடைபெறும்.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்த அனைவருக்கும் அரசு வேலை கிடைத்தாகி விட்டது.இனி பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு சேரும் மாணவர்கள்,பிற்காலத்தில் எந்த அரசு அலுவகலத்தில் வேலை செய்ய விருப்பமோ,அந்த அலுவலகத்தில் இப்போதே சென்று வேலை உறுதிக் கடிதம் பெற்றுக் கொள்ளலாம்.
முதல்வர்,துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்காக சாலைகளில் போக்குவரத்து ஒரு போதும் நிறுத்தப்படாது.அவர்கள் இனி இரவு பனிரெண்டு மணிக்கு மேல்,அதிகாலை ஆறு மணிக்குள் மட்டும் சாலையில் செல்வார்கள்.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் குடி தண்ணீர் வழங்க "அக்வாஃபீனா" நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.குழாய்கள் பதிக்கும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.இந்த மாத இறுதிக்குள் அனைவருக்கும் "அக்வாஃபீனா" தண்ணீர் உறுதி.
ஏழை எளிய மக்களுக்கும் சிறப்பான மருத்துவ சேவை வழங்கும் நோக்கில்,அனைத்து தனியார் மருத்துவமனைகளுடனும் அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.இனி அனைவரும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
இருண்டு கிடக்கும் பனை விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்ற, கள் இறக்க அனுமதி தரப்பட்டுள்ளது.அவர்களுக்கு தேவையான கலயம்,அரிவாள் போன்றவற்றை அருகிலுள்ள காவல் நிலையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
தமிழகத்தின் அனைத்துச் சாலைகளும் நமீதாவின் கன்னம் போல் வழவழப்பாக மாற்றப்படும், அதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் நடக்கின்றன.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ********************************************************************
இனி செம்மொழி மாநாடு நடத்தியதால் விளைந்த "முக்கியமான" நன்மைகள்.
தமிழகத்தின் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு விட்டதாலும்,அரசியல் நடத்த வேறு வழியில்லாததாலும், தோன்றியதிலிருந்து தமிழர்களுக்கு நன்மை மட்டுமே செய்து வரும் திமுக,காங்கிரஸ் தவிர்த்த அனைத்துக் கட்சிகளும் கலைக்கப்பட்டு விட்டன.இதைக் கேள்விப்பட்ட முதல்வர்,"மறப்போம் மன்னிப்போம்" என்ற தமிழர் பண்பாட்டின் படி ஜெயலலிதா அவர்களை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்தார்.இந்த உணர்ச்சிமயமான சந்திப்பில் உடனிருந்த அமைச்சர்கள் துரைமுருகன்,பொன்முடி,தயாநிதி மாறன் மற்றும் சசிகலா,வைகோ,ராமதாஸ், திருமா, விஜயகாந்த்,பாண்டியன் ஆகியோர் சிந்திய ஆனந்தக் கண்ணீரில் அந்த பகுதியே வெள்ளக் காடானது.
செம்மொழி மாநாட்டோடு நடந்த தமிழ் இணையத்தள மாநாட்டின் மூலம் மின்னஞ்சல் அனுப்ப கற்றுக் கொண்ட முதல்வர், இனிமேல் யாருக்கும் கடிதம் எழுதப் போவதில்லை என சபதம் எடுத்துள்ளார்.
Thanks Karisalkaran http://www.blogger.com/profile/00676677411751759356
Courtesy: http://karisalkaran.blogspot.com/2010/06/28-2010.htmlPrivate Reply to Senthil Nathan | Jun 23, 2010 7:10 pm | | re: re: Thought Provoking and Hilarious - But in Tamil | # | Anu M | | :D
Nice one!Private Reply to Anu M | Jun 24, 2010 1:08 am | | re: re: re: Thought Provoking and Hilarious - But in Tamil | # | padmanabhan ramasubban | | Senthil Anna,
SUper o super!
When we derive such huge benefits Vanchagah pugazhchi matroom naer pugazhchi,dubakoor pugazhchi endru palavatriam neengal kooralam!
Imagination going berserk!
Ennah LSD trip ah!
Yaarukku LSD trip !
theri leehdu!Private Reply to padmanabhan ramasubban | |
| |
| |